மதுரையில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் சமூகவலைதளங்களில் பரப்பியவர் கைது
Feb 26 2020 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பகிர்ந்து வருவதாக, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சைபர் கிரைம் போலீசார் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் குமாரை கைது செய்தனர். அவருடன் இணைந்து சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பகிர்ந்துவந்த மேலும் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.