2018-19ம் ஆண்டு நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் - இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர் மற்றும் தந்தையைக் கைது செய்து சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை
Feb 26 2020 1:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வில் மோசடி செய்து கல்லூரியில் சேர்ந்ததாக, சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரையும், அவரது தந்தையையும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி பெற்ற விவகாரம், கடந்த ஆண்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர்கள், இடைத்தரகர்கள் என 14 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மாணவர்களுக்கு பதிலாக தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அண்மையில் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வரும் தனுஷ் என்ற மாணவர், நீட் தேர்வில் மோசடி செய்ததாக கல்லூரி நிர்வாகம், புகார் அளித்தது. இதனடிப்படையில், மாணவர் தனுஷ் மற்றும் அவரது தந்தையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.