டெல்லி வன்முறைச் சம்பவங்கள் தொடரக் கூடாது - டிடிவி தினகரன் பேட்டி
Feb 27 2020 7:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி வன்முறைச் சம்பவங்கள்போன்று தொடராமல் இருக்க மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திரு.டிடிவி தினகரன், குடிமக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் அச்சத்தைப் போக்குவது மத்திய அரசின் கடமை என தெரிவித்தார். சி.ஏ.ஏ சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்த என்.பி.ஆர். நடைமுறையே தொடர வேண்டும் என்றும் கூறினார்.