சி.ஏ.ஏ. விவகாரத்தில் ரஜினி நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் : என்.ராம் வேண்டுகோள்
Feb 27 2020 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேற்று நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய திரு.என்.ராம், குடியுரிமை சட்ட விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். இதனைத்தொடர்ந்து இரவில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டுமென தெரிவித்தார். அதே வேளையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வாய்ப்பில்லை என்றும் கூறினார். ரஜினிகாந்தின் இந்த கருத்தை ஏற்க முடியாது என திரு.என். ராம் இன்று தெரிவித்தார்.