கோவையில் ஆதார் எண்களை சேகரித்த தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்
Feb 27 2020 8:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுப்பட்டதாக, தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேரை பிடித்து, அப்பகுதிமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உக்கடம், கோட்டை மேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள், வீட்டிலிருந்த பெண்களிடம் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அதனை செல்போனில் பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த சின்னபள்ளி ஜமாத் அமைப்பினர் கணக்கெடுப்பில் ஈடுப்பட்ட நான்கு பேரை பிடித்து விசாரித்துள்ளனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் கைது செய்யப்பட்டனர்.