சூளகிரியில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்
Feb 27 2020 9:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, சூளகிரியில், கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி செயலாளர் திரு.எம்.ஜி. செந்தில் - சவுந்தர்யா தம்பதியின் ஆண் குழந்தைக்கு, விக்ரம் என கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பெயர் சூட்டினார். தனது அண்ணன் மகன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளும்படி திரு.எம்.ஜி. செந்தில் அழைப்பிதழ் வழங்கினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக்கழகச் செயலாளர் திரு.கணேஷ்குமார், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சந்திப்பின்போது, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.பி.பழனியப்பன், தருமபுரி மாவட்டக்கழகச் செயலாளர் திரு.டி.கே.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு.அரூர் முருகன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக்கழகச் செயலாளர் திரு.மு. மாரேகவுடு, கிருஷ்ணகிரி மத்திய மாவட்டக்கழகச் செயலாளர் திரு.அறிவழகன் மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநிலத்தலைவர் திரு.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.