சேலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
Feb 27 2020 9:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் மீட்கப்பட்டது. சேலம் நான்கு ரோடு சந்திப்பில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கரட்டு முனியப்பன் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, நில அளவு ஆய்வு செய்யப்பட்டது. இதில், கோயிலுக்குச் சொந்தமான மற்றும் தானமாக வழங்கப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 9 ஆயிரம் சதுர அடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இடத்தை நீதிமன்ற உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.