தனுஷ்கோடி கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது
Feb 27 2020 9:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனுஷ்கோடி கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேரை மடக்கிப்பிடித்த இந்திய கடற்படையினர், அவர்களின் ஃபைபர் படகையும் பறிமுதல் செய்தனர். இந்திய கடலோர காவல் படையினர் இந்திய-இலங்கை கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கையில் இருந்து தனுஷ்கோடி நோக்கி மின்னல் வேகத்தில் ஃபைபர் படகு வந்தது. அந்த படகில் 5 பேர் இருந்துள்ளனர். அவர்களை கைது செய்த பாதுகாப்புப் படையினர், இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் அத்துமீறி நுழைந்தது ஏன்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.