அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு
Feb 28 2020 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
கடலூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. அக்ரி. பி. முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. கோவிந்தராஜ், மாவட்ட அவைத்தலைவர் திரு. கே.பி. கலையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கோவை கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில், போத்தனூரில், கிழக்கு மாவட்டச் செயலாளர் ரோகினி என்கிற கிருஷ்ணகுமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் திரு. சண்முகவேலு சிறப்புரையாற்றினார். மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு. என்.ஆர். அப்பாதுரை, சூலூர் நகர செயலாளர் திரு. சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.