ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு
Feb 28 2020 8:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆளுநரின் ஒப்புதல் இன்றி தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஏற்காமல் உள்ள ஆளுநரின் செயலை சட்டவிரோதமானது என அறிவிக்கவும், ஆளுநரிடம் ஒப்புதல் பெறாமல் தன்னை விடுதலை செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சரவை முடிவு ஆளுநரை கட்டுப்படுத்தும் என்றும், ஆளுநருக்கு என்று தனிப்பட்ட முறையில் அதிகாரம் இல்லை எனவும் நளினி மனுவில் தெரிவித்துள்ளார்.