மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள் : அ.ம.மு.க சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கல்
Feb 28 2020 9:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாளையொட்டி, அ.ம.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாளையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கழக மாவட்ட மீனவரணி சார்பில் மாரியம்மன் திருக்கோயிலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. கோயில் திடலில் உள்ள மண்டபத்தில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. கிழக்கு மாவட்டக்கழகச் செயலாளர் திரு.ராமுத்தேவர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர அ.ம.மு.க சார்பில் அம்மா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ராசிபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கழக துணைத் தலைவரும், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான திரு.எஸ்.அன்பழகன், அம்மா பேரவை இணைச்செயலாளர் திரு.ஏ.பி.பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்ட அ.ம.மு.க சார்பில், மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளையொட்டி, பிடமனேரியில் உள்ள விவேகானந்தா காதுகேளாதோர் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. தொப்பூரில் உள்ள வள்ளலார் ஆதரவற்றோர் காப்பகத்தில் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மாவட்டக் கழகச் செயலாளர் திரு.டி.கே. ராஜேந்திரன், எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் அரூர் திரு.ஆர்.ஆர். முருகன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் திரு.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம் மிட்டூர் பகுதியில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பிரமாண்ட கேக்கும் வெட்டப்பட்டது.
ஆயிரத்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் திரு.ஆர். பாலசுப்பிரமணியன், திருப்பத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.எம். பெரியண்ணன், கழக அமைப்பு செயலாளர் திரு.பாண்டுரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றியப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் திரு.என்.ஜி. பார்த்திபன், ராணிப்பேட்டை நகர கழகச் செயலாளர் திரு.பரத் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.