காவல் உதவி ஆய்வாளர் வில்சன் மகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைகான பணி ஆணை
Feb 28 2020 9:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் மகளுக்கு வருவாய்த்துறையில், இளநிலை உதவியாளர் வேலைக்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த மாதம் 8-ம் தேதி பணியில் இருந்தபோது பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது.