தஞ்சாவூரில் மளிகை கடையை பூட்டச் சொல்லி காவல் ஆய்வாளர் அத்துமீறல் - பெண்ணை தரக்குறைவாக பேசி, சாவியை எடுத்துச் சென்றதாக புகார்
Mar 27 2020 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்திருந்தபோதும், தஞ்சாவூரில் காவல் ஆய்வாளர் ஒருவர், மளிகை கடையை பூட்டச் சொல்லி அறிவுறுத்தி, பெண்ணிடமிருந்து சாவியை வாங்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 144 தடை அமலில் உள்ளபோதும், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், தஞ்சை கீழவாசல் பகுதியில் ரோந்து சென்ற மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் செங்குட்டுவன், அங்கு திறந்திருந்த மளிகை கடையை பூட்டும்படி அறிவுறுத்தினார். பின்னர், கடையின் உரிமையாளரான பெண்ணை தரக்குறைவாக பேசி, கடையின் சாவியை எடுத்துச் சென்றார். மேலும் கீழவாசல் பகுதியில் கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளையும் தரக்குறைவாக பேசினார். இவரது செயலுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.