புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்கைதிகள் வீடியோ காலில் உறவினர்களுடன் பேச சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு
Mar 27 2020 2:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைவாசிகளிடம் அவர்களின் உறவினர்கள் "வீடியோ கால்" மூலம் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக சிறைக்கைதிகளைக் காண உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், சிறைத்துறை நிர்வாகம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. தண்டனை சிறை பிரிவில் 5 ஸ்மார்ட் போன்கள், விசாரணை சிறை பிரிவில் 8 ஸ்மார்ட் போன்கள், பெண்கள் சிறை பிரிவில் ஒரு ஸ்மார்ட் போன் என மொத்தம் 14 ஸ்மார்ட் போன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.