ஊரடங்கு உத்தரவால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பூக்கள் ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை
Mar 27 2020 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லைகள் மூடப்பட்டதால், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப்பகுதியில் பூக்கள் ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பங்கி, செண்டுமல்லி, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூக்கள் தற்போது அதிக அளவில் விளைந்தும், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படாததால் பூக்கள் வீணாகி வருவதாக தெரிவித்தனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.