பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க தூத்துக்குடி பழைய, புதிய பேருந்து நிலையங்களில் தற்காலிக காய்கறி கடைகள் திறப்பு
Mar 27 2020 3:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊரடங்கு காரணமாக, பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏதுவாக, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் இடைவெளி விட்டு, காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்பட்டனர். காய்கறிகள் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதாகவும், விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.