ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்துவரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிவரும் அம்மா உணவகம்
Mar 27 2020 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்துவரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு, அம்மா உணவகத்தில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமானோர் அம்மா உணவகத்தில் உணவருந்தியும், குடும்பத்தினருக்கு பார்சலும் வாங்கிச் செல்கின்றனர். அங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சமூக இடைவெளியை பின்பற்றி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் அடுத்தடுத்து உணவருந்த அனுமதிக்கப்படுகின்றனர்.