காவல்துறை சார்பில் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் - பொதுமக்கள் பாராட்டு
Mar 28 2020 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க, ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்கள், தங்கள் வேலை நேரம்போக மீதமுள்ள நேரங்களில், முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள, முகக்கவசம் அணிய வேண்டுமென, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால், முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் தேன்மொழி அவர்களின் ஆலோசனையின் பெயரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி அறிவுறுத்தலின்படி, காவல்துறை சார்பில், முகக்கவசங்கள் தயாரிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்கள், தங்கள் வேலை நேரம்போக மீதமுள்ள நேரங்களில், முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. போலீசார் பயன்பாட்டிற்குப் போக மீதமுள்ள முகக்கவசங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறது.