நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சுயக்கட்டுப்பாடு - வெளியாட்களுக்கு அனுமதி மறுத்து எச்சரிக்கை பலகை

Mar 28 2020 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸை தடுக்‍கும் விதமாக, அந்நியர்கள் யாரும் கிராமத்திற்குள் நுழைய தடைவிதித்து, பொதுமக்கள் எச்சரிக்‍கை பலகை வைத்தும், சோதனைச்சாவடி அமைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஒக்கிலிபட்டி மற்றும் சிக்கநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் வசிக்‍கும் கிராம மக்‍கள், கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் விதமாக, சாலையின் குறுக்கே தடுப்பு அமைத்து, யாரும் வெளியே போகக் கூடாது எனவும், கிராமத்திற்குள் யாரும் வரக்கூடாது எனவும் சுயக்‍கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதேபோல் வெண்ணந்தூர் அருகேயுள்ள நாச்சிப்பட்டி கிராமத்திலும், கிராம எல்லையில், பொதுமக்கள் தடுப்பு வேலி அமைத்து, வெளியாட்கள் யாரும் நுழையாதவாறு தடை ஏற்படுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பல்வேறு பகுதிகளில் வசிக்‍கும் பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து, வெளியாட்கள் யாரும் உள்ளே வரக்‍கூடாது என எச்சரிக்‍கை பலகை வைத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் வசிக்‍கும் யாரேனும் வெளியே சென்றுவிட்டு வந்தால், தெருமுனையில் மஞ்சள் கலந்த நீரில் கை, கால் கழுவிய பின்னரே அனுமதிக்‍கப்படுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00