காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு - கொரோனா அறிகுறி காணப்பட்ட 52 நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு
Mar 28 2020 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்ட 52 நபர்கள், தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளை, போலீசார், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். திருவள்ளூர் சாலை, தாம்பரம் சாலை, செங்கல்பட்டு சாலை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும், போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரகடம் மற்றும் இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களில், வெளிநாடு மற்றும் வெளிமாநில மக்கள் பணியாற்றுவதால், அந்த பகுதிகளை, சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சுங்குவார்சத்திரம், ஒரகடம் மற்றும் வல்லக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 52 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்ததால், அவர்களை, சுகாகாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.