தேனியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞர் மூதாட்டியின் கழுத்தை கடித்ததாக வழக்குப்பதிவு
Mar 28 2020 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனியில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞர், அங்கிருந்து தப்பி, சாலையில் நிர்வாணமாக ஓடியதுடன், மூதாட்டியின கழுத்தை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், இலங்கையில் இருந்து கடந்த 21 ஆம் தேதி சொந்த ஊர் திரும்பினார். வெளிநாட்டிலிருந்து வந்ததால், இவர், சுகாதாரத் துறையினரால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், திடீரென தனது ஆடைகளைக் களைந்து, நிர்வாணமாக சாலையில் ஓடிய அவர், நாச்சியம்மாள் என்ற மூதாட்டியின் கழுத்தையும் கடித்துள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டதும், அங்கிருந்த பொதுமக்கள், இளைஞரை தாக்கி, மூதாட்டியை மீட்டனர். இளைஞர் கடித்ததில் பலத்த காயமடைந்த மூதாட்டி, மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, மணிகண்டனை, அரசு மருத்துவமனையில் சேர்த்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.