தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - சுகாதாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை
Mar 28 2020 3:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் 24 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் கண்ணகி நகரில் சுமார் 15 ஆயிரம் குடியிருப்பு கட்டடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை, மாநகராட்சி காவல் ஆணையர் திரு.பிரகாஷ், வருவாய் பேரிடர் ஆணையர் திரு.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் திரு.பிரகாஷ், 5 நாட்களுக்குத் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி வைத்துக்கொண்டால் வெளியே செல்வதை தவிர்க்கலாம் என கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பேசிய வருவாய் பேரிடர் ஆணையர் திரு.ராதாகிருஷ்ணன், கூட்ட நெரிசல் பகுதியில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சமூக இடைவெளி மற்றும் கை கழுவுதலை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.