தஞ்சையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : 5000-ஐ நெருங்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை
Mar 28 2020 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் எதிரொலியாக, தஞ்சை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து தஞ்சை மாவட்டத்தில் வந்தவர்கள் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது உறவினர்களும், தஞ்சை மாவட்ட சுகாதாரத் துறையினர் மூலம் 28 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 961-ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.