சேலத்தில் இரும்புக் கடையில் மின்கசிவால் தீ விபத்து : ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
Mar 31 2020 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
சேலம் காட்டூர் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவருக்கு சொந்தமான இரும்பு கடை, மணியனூர் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த கடையில் பிளாஸ்டிக், பேப்பர் மற்றும் இரும்பு பொருட்கள் வாங்கப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு திடீரென இந்தக் கடையில் தீ பற்றி எரிந்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதமாகின. மின்கசிவு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.