திண்டுக்கல் அருகே விளைந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள திராட்சை பழங்கள் - அறுவடை செய்ய முடியாமல் அழுகும் நிலையில் இருப்பதால் விவசாயிகள் வேதனை
Mar 31 2020 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விளைந்திருக்கும் திராட்சை பழங்களை அறுவடை செய்ய முடியாமல் போனதால் அவை அனைத்தும் அழுகும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலகுண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் திராட்சை தோட்டங்கள் உள்ளன. தற்போது கொரோனா வைரஸ் தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொத்து கொத்தாக கொடிகளில் தொங்கும் திராட்சை பழங்களை பறிப்பதற்கு போதிய கூலித்தொழிலாளிகள் வேலைக்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வேலைக்கு வரும் தொழிலாளர்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட திராட்சை பழங்கள் வீணாகி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசு தங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.