தமிழக ஆட்சியாளர்கள் பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்யவேண்டும் - கொரோனா தடுப்பு குறித்து தா. பாண்டியன் வலியுறுத்தல்
Mar 31 2020 1:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தற்போதுதான் அரசுகள் வென்டிலேட்டர் வாங்கும் அவல நிலை உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.தா.பாண்டியன் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயா நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராணுவ தளவாடங்கள் வாங்குவதை நிறுத்திவிட்டு மருத்துவ துறைக்கு வேண்டிய உபகரணங்களை வாங்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆட்சியாளர்கள் பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டு மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா நோய் தடுப்பு பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை நேரில் பார்வையிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.