விழுப்புரத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று : டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றதாக தகவல்
Mar 31 2020 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்ட விழுப்புரத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 7 பேரில், 3 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள கொரோனா சிறப்பு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ரத்த பரிசோதனைகளின் முடிவில் மூன்று பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று பேரும் விழுப்புரத்திலுள்ள முத்தோப்பு, கமலா நகர் மற்றும் வாசு நகரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூன்று பேரும், கடந்த மாதம் டெல்லியில் நடைப்பெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டு ஊர் திரும்பியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.