சென்னை காசிமேடு கடற்கரையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்
Mar 31 2020 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை காசிமேடு கடற்கரையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை காசிமேடு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு மேலே ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 5 லிட்டர் அளவிலான கிருமிநாசினியை சுமந்தபடி 50 மீட்டர் உயரமும் 2 கிலோமீட்டர் தூரமும் சென்று ட்ரோன் கிருமி நாசினியை தெளித்தது. சென்னை பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் விவசாய நிலங்களில் பயிர்களுக்கு பூச்சிமருந்து அடிப்பதற்காக தயாரிக்க கண்டுபிடிக்கப்பட்ட இந்த ட்ரோன், தற்பொழுது வைரஸை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.