கொரோனா வைரஸ் காரணமாக ஒரே நாளில் 24 பேர் அனுமதி - பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Mar 31 2020 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒரேநாளில் 24 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் தனி வார்டும், தனிமை வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனா அறிகுறியுடன் வருபவர்களை சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். துபாயில் இருந்து நெல்லைக்கு வந்த சமூகரெங்கபுரத்தை சேர்ந்த ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுடன் ஏற்கெனவே சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் மாநாட்டிற்கு சென்று வந்த 16 பேர், பேட்டை, கோடீஸ்வரநகர் ஆகிய பகுதியை சேர்ந்த 8 பேர் என 24 பேர், இன்று கொரோனா வைரஸ் அறிகுறியுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரேநாளில் 24 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்‍கள் அச்சமடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00