கொரோனா அறிகுறி உள்ளவர்கள், சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ள செயலியில், செல்ஃபி எடுத்து அனுப்பலாம் - மாநகராட்சி ஆணையர் தகவல்
Apr 1 2020 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பாதித்த மாவட்டங்களில் வீடுவீடாக கொரோனா பரிசோதனை முழுவீச்சில் நடந்து வருவதாகவும், அறிகுறி உள்ளவர்கள், சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ள கொரோனா செயலியில், செல்ஃபி எடுத்து அனுப்பலாம் என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் தெரிவித்தார். சென்னை ரிப்பன் மாளிகையில், கொரோனா செயலியை அறிமுகம் செய்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறினார்.