தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை - 16 மாவட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கணக்கெடுப்பு
Apr 1 2020 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 16 மாவட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் வாயிலாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நேற்று வரை ராணிப்பேட்டை, தஞ்சாவூர், வேலூர், கோயம்புத்தூர், விருதுநகர், செங்கல்பட்டு, மதுரை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி, சென்னை, திருப்பூர், கரூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில், 3 ஆயிரத்து 698 களப்பணியாளர்கள் வாயிலாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 815 வீடுகளில், 6 லட்சத்து 88 ஆயிரத்து 473 நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.