திருச்சியில், அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க அமமுக சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி
Apr 1 2020 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு, அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க, திருச்சி மாநகர் மாவட்டக் கழகம் சார்பில், 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்புப் பணிக்காக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் இழந்துள்ள தினக்கூலித் தொழிலாளர்கள், உள்ளிட்ட ஏழை எளிய மக்கள், உணவுக்காக அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க உதவும் பொருட்டு, அம்மா உணவகத்தில் இலவசமாக உணவருந்த, திருச்சி மாநகர் மாவட்டக் கழகம் சார்பில், 25 ஆயிரம் ரூபாய் நிதியினை, கழகச் செயலாளர் திரு. ஜெ. சீனிவாசன், மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, சிறுபான்மை பிரிவு மாவட்டப் பொறுப்பாளர் பஷீர் உடனிருந்தார்.