கொரோனா நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் : சமூக இடைவெளியை பின்பற்றாத ரேஷன் கடையில் குவிந்த மக்கள்
Apr 1 2020 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தியாகராயநகரில் கொரோனா நிவாரணத் தொகைக்கான டோக்கன் வாங்குவதற்காக, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், மக்கள் ரேஷன் கடைகளில் குவிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணத் தொகைக்கான டோக்கன் இன்று பிற்பகல் முதல் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கனை ரேஷன் ஊழியர்கள் வீடுவீடாக சென்ற விநியோகிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், சென்னை தியாகராய நகரில், டோக்கன் வாங்குவதற்காக மக்கள் ரேஷன் கடையில் குவிந்தனர். அதனால் அங்கேயே அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. கொரோனா பரவாமல் தடுக்கவே, ரேஷன் ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்க வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்களை ஒன்றாக கூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.