தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் 168 பேர் உடனடியாக பணிக்கு திரும்புமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Apr 5 2020 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற, சேலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் 168 பேர், உடனடியாக பணிக்கு திரும்புமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை அடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியைச் சேர்ந்த 168 பணியாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்களை, உடனடியாக பணிக்குத் திரும்பும்படி, வங்கியின் பொது மேலாளர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி திரு.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தபோது, வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 168 ஊழியர்களும் சொந்த ஊர்களுக்குச் செல்ல எந்த அனுமதியும் வழங்கவில்லை எனவும், வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டதாகவும், சொந்த ஊர்களுக்குச் சென்றது சட்டவிரோதம் எனவும் வாதிட்டார்.
இதை பதிவு செய்த நீதிபதி, 168 ஊழியர்களையும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டார். சொந்த கிராமங்களுக்கு அருகில் உள்ள கிளைகளில் பணியாற்ற அனுமதி கோரி சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.