ஜைன மத சகோதர, சகோதரிகளுக்கு, டிடிவி தினகரன், மகாவீர் ஜெயந்தி வாழ்த்து - உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பெருந்தொற்று நோயை வென்று, அனைவரும் நலத்தோடு வாழ்ந்திட இந்நன்னாளில் பிரார்த்திக்க வேண்டுகோள்
Apr 5 2020 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாவீரர் வர்த்தமானரின் பிறந்தநாளையொட்டி, ஜைன மத சகோதர, சகோதரிகளுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பெருந்தொற்று நோயை வென்று, அனைவரும் நலத்தோடு வாழ்ந்திட இந்நன்னாளில் உளமாற பிரார்த்திப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள மகாவீர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில், 'சுயக் கட்டுப்பாடும், அமைதியும்தான் ஆன்ம வெற்றிக்கு வழிகளாகும்' என்று போதித்த மகாவீரர் வர்த்தமானரின் பிறந்தநாளையொட்டி, ஜைன மத சகோதர, சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனிதகுலம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், 'துன்பங்களில் இருந்து விடுபட நம்பிக்கையும், தெளிவான அறிவும், நன்னடத்தையும், அடிப்படைத் தேவைகள்' என்ற மகாவீரரின் போதனையை மனதில் இருத்திக் கொள்வோம் - இந்த இக்கட்டான சூழலில் தனிமனித விலகலை முறையாகக் கடைபிடித்து, இயன்ற அளவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்து, எல்லா வகை வெறுப்புகளையும் அடியோடு அகற்றி, அத்தனை உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவோம் என திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
'ஜெயித்தவர்' என்ற பொருளில் 'ஜீனர்' என்று அழைக்கப்பட்ட மகாவீரரின் பிறந்தநாளில், அதற்கான உறுதியை ஒவ்வொருவரும் ஏற்போம் - உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பெருந்தொற்று நோயை வென்றிடுவோம் - அனைவரும் நலத்தோடு வாழ்ந்திட இந்நன்னாளில் உளமாற பிரார்த்திப்போம் என கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.