செங்கல்பட்டில் போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷ் கலந்து குடித்த ரயில்வே ஊழியர்கள் 2 பேர் உட்பட 3 பேர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
Apr 5 2020 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டில் மது கிடைக்காததால், போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷை கலந்து குடித்த மூன்று பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபானங்கள் கிடைக்காமல் குடிமகன்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், செங்கல்பட்டில் ரயில்வே ஊழியர்கள் பிரதீப், சிவசங்கர் மற்றும் ரயில்வே ஊழியரின் மகன் என மூவரும், போதைக்காக பெயிண்ட் அடிக்க பயன்படுத்தப்படும் வார்னிஷை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். இதனால், வாந்தி மயக்கம் ஏற்பட்டு, மூவரும் உயிரிழந்தனர். ஏற்கெனவே இதேபோல் புதுக்கோட்டையில் போதைக்காக குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்த 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.