தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவர் உட்பட இருவருக்கு கொரோனா - மருத்துவமனைகள் மூடல்
Apr 5 2020 6:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில், மருத்துவர் உட்பட இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இரண்டு மருத்துவமனைகள் மூடப்பட்டன. திருச்செந்தூர் அருகே காயல்பட்டணத்தைச் சேர்ந்த 36 வயதான ஆண் மருத்துவர் ஒருவருக்கு, அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காயல்பட்டணம் அரசு மருத்துவமனை மூடப்பட்டது. இதே போல், இவரது நண்பருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது மனைவி மருத்துவராகப் பணிபுரிந்த ஆரம்ப சுகாதார நிலையமும் மூடப்பட்டது.