திருவாரூரில் வீடுகளில் முடங்கியிருக்கும் மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - வீடுகள் தோறும் சென்று வழங்கிய அ.ம.மு.க. நிர்வாகிகள்
Apr 6 2020 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய ஊரடங்கு காரணமாக வீடுகளிலேயே முடங்கியுள்ள திருவாரூர் மாவட்ட மக்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய நிவாரணப் பொருட்கள் வீடு வீடாக வழங்கப்பட்டன.
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டக்கழக செயலாளர் திரு.எஸ். காமராஜ் தலைமையில், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் திரு.கோபால்ராமன், ஊராட்சித்தலைவர் தனலெட்சுமி ஆகியோர், விளக்குடி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 2000த்திற்கும் மேற்பட்டோருக்கு காய்கறிகள், கிருமி நாசினி, முகங்கவசங்கள், கையுறைகள் உட்பட 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய நிவாரண பொருட்கள், வீடு வீடாக வழங்கப்பட்டன.