கொரோனா கொடுமைக்கு மத்தியிலும் கொள்ளை லாபத்தை குறிவைக்கும் வியாபாரிகள் - தக்காளியை சொற்ப விலைக்கு வாங்கி சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக விவசாயிகள் வேதனை
Apr 6 2020 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய ஊரடங்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, வியாபாரிகள் பலர் தங்களிடமிருந்து குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கி கொள்ளை லாபம் அடிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அரியலூர் நகரில் இடநெருக்கடி காரணமாக காந்தி காய்கறி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு, ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஊரடங்கு காரணமாக தங்களால் சந்தைக்கு கொண்டுபோய் விற்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகள் இந்த சந்தர்ப்பந்தை பயன்படுத்தி கொள்ளை லாபம் அடிப்பதாக அங்குள்ள விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தங்களிடமிருந்து கிலோ 8 ரூபாய்க்கு தக்காளியை வாங்கி 20 ரூபாய்க்கும் அதிகமாக வியாபாரிகள் விற்பனை செய்வதாக மறவனூர் பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.