ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மேலும் 3 பேர் அனுமதி
Apr 6 2020 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 2 பேர், தாங்களாகவே முன்வந்து தங்களை பரிசோதிக்கும்படி மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். மற்றொருவர், கோவையில் இருந்து ராமநாதபுரத்திற்கு திரும்பி வந்த நிலையில், காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது வரை 15 பேர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.