ஆரம்ப சுகாதார மையங்களுக்கு கொரோனா பாதிப்புடன் வருபவர்களுக்கு தனி பாதை ஏற்படுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
May 25 2020 12:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆரம்ப சுகாதார மையங்களுக்கு கொரோனா பாதிப்புடன் வருபவர்களுக்கு தனி பாதையை ஏற்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுக்குறித்து தலைமை செயலர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்புடன் வருபவர்களுக்கு தனி பாதையை ஏற்படுத்த வேண்டும் என்றும் நகர்புறங்களில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக நோய்த்தொற்று அல்லாதவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க இந்த புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.