வேலூரில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதி
May 25 2020 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், வேலூரில் வெயில் தாக்கம் கொரோனாவை விட கொடுமையாக இருக்கிறது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று வேலூரில் 108 டிகிரி வெப்பநிலை பதிவானது. அனல்காற்று வீசியதால், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். வெயிலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், பப்பாளி, வெள்ளேரி ஆகியவற்றின் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால், வேலூரில் தர்பூசணி விற்பனை களைகட்டியது. வெயிலின் கொடுமையால் சிறுவர்கள் வீடுகளிலேயே முடங்கியபடி, கேரம்போர்டு, தாயம் போன்றவற்றை விளையாடி பொழுதை கழிக்கின்றனர்.