சென்னை வானகரத்தில் விபத்தில் காயமடைந்த நபர் காரின் மேல் இருப்பது கூட தெரியாமல் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் கைது
May 25 2020 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை வானகரத்தில் விபத்தில் காயமடைந்த நபர் காரின் மேல் இருப்பது கூட தெரியாமல் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுனரை காவல்துறையினர் துரத்திச் சென்று கைது செய்தனர்.
அயப்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற தனியார் கம்பனி ஊழியர் இருசக்கர வாகனத்தில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் ரஞ்சித் குமார் தூக்கி வீசப்பட்டு காரின் மேல் விழுந்துள்ளார். விபத்து ஏற்பட்ட பதட்டத்தில் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற கார் ஓட்டுனர், காயமடைந்த ரஞ்சித் காரின் மேல் இருப்பது கூட தெரியாமல் அங்கிருந்து காரை ஓட்டி சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் காரை ஒரு கிலோ மீட்டர் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து ஓட்டுநர் கணேசமூர்த்தியை கைது செய்தனர். காயமடைந்த ரஞ்சித் குமாரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.