மதுரையிலிருந்து செல்லும் 10 உள்நாட்டு விமானங்களின் சேவை ரத்து - போதுமான பயணிகள் இல்லாததால் இன்று நான்கு விமானங்கள் மட்டுமே இயக்கம்
May 26 2020 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை விமான நிலையத்தில் போதிய பயணிகளின் வருகை இல்லாததால் 10 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இரண்டு மாதகால பொது ஊரடங்கிற்கு பிறகு நாடு முழுவதும் நேற்று உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய விமான நிலையமாக திகழும் மதுரையில் நேற்று 10 விமானங்களின் போக்குவரத்து நடைபெற்ற நிலையில், இன்று எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வரவில்லை. இதன் காரணமாக, இதன் காரணமாக இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களை சேர்ந்த 10 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. நான்கு விமானங்கள் மட்டுமே இன்று இயக்கப்பட்டன. மதுரையில் சராசரியாக நாள்தோறும் 22 விமானங்களின் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.