பாலைவன வெட்டுக்கிளிகளின் படை தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு - தமிழக வேளாண்துறை தகவல்
May 27 2020 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலைவன வெட்டுக்கிளிகளின் படை தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்போது காணப்படும் வெட்டிகிளிகளின் படையெடுப்பு, தக்காண பீடபூமியை தாண்டி இதுவரை வந்ததில்லை என்றும், இதனால் தமிழகத்துக்கு வெட்டுக்கிளிகள் படை வருவதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்றும் தமிழக வேளாண்துறை தகவல் தெரிவித்துள்ளது. மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை மையத்திடமிருந்து, வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்த அறிவிப்புகள் பெறப்பட்டு, அவற்றின் நகர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை ஒருவேளை வெட்டுக்கிளிகள் தாக்க நேர்ந்தால், வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகளை உண்ணும் கோழிகள் மற்றும் பறவைகளை பயன்படுத்தியும், அரசு அனுமதியுடன் பூச்சி மருந்துகளை ஒட்டுமொத்த வான்வெளி தெளிப்பு மூலம் அடித்தும் கட்டுப்படுத்தலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.