ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன், வரும் 29-ம் தேதி முதல் வழங்கப்படும் - தமிழக அரசு தகவல்
May 27 2020 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன், வரும் 29-ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில், ரேஷன் கடைகளுக்கு சென்று பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு செல்லும்போது, மக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும், பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.