தனியார் பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது - மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை
May 27 2020 12:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனியார் பள்ளிகள், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த கூடாது என்றும், மீறினால் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்விதுறை எச்சரித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் திரு. செங்கோட்டையன், பொது முடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தி வசூலிக்க கூடாது என தெரிவித்தார். பள்ளிகளை திறக்க தாமதம் ஏற்படுவதால் பாடங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.