சென்னையில் சாலையோர வியாபாரிகளை தாக்கியதாக புகார் - வியாபாரிகளுக்கும், போலீசாருக்குமிடையே கடும் வாக்குவாதம்
May 27 2020 2:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை பூக்கடை பகுதியில் இன்று கடை வைத்த சாலையோர விபாபாரிகளை போலீசார் அப்புறப்படுத்தியபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கொரோனா தடை உத்தரவுக்கான நிபந்தனைகளை தமிழக அரசு தளர்த்தி வருகிறது. கடைகளை சில நிபந்தனைகளுடன் நடத்தவும் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் சென்னை பூக்கடை பகுதியில் வியாபாரிகள் சிலர் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தியபோது, கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பெண் வியாபாரிக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் சாலையோர வியாபாரிகளை போலீசார் அகற்றிய நிகழ்வால், சென்னை பூக்கடை பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.