சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வு தளத்தில் பணிகள் மீண்டும் தொடக்கம் - பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு
May 27 2020 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கீழடி 6-ம் அகழாய்வின் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வு தளத்திலும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கீழடி 6-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் அண்மையில் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வு தளத்தில் நிறுத்திவைக்கப்பட்ட அகழாய்வு பணிகளும் மீண்டும் தொடங்கியுள்ளன. ஏற்கனவே 3 குழிகள் தோண்டப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 2 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. நான்கு தொல்லியல் அலுவலர்கள் மற்றும் 5 தொல்லியல் துறை மாணவர்கள் உட்பட 30 பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ளதால், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.