திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதிக்கு வைரஸ் தொற்று உறுதி - கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை
May 27 2020 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதிக்கு கொரோனா ெதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 12ம் தேதி நன்நெறி பயிற்சிக்காக சென்னை புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட 5 பேரில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.